• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கு தள்ளுபடி!

April 27, 2018 தண்டோரா குழு

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரும் வழக்கில் சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாதுஉயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள்‌‌‌, முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து, முதலமைச்சருக்கு எதிராக வாக்களித்த வர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இதையடுத்து, இவ்வழக்கில் இன்று வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால்,தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அமர்வு இன்று தீர்பளித்துள்ளது.

அதில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள்களாக நீடிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால்
முடிவெடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்திரவிடமுடியாது. இந்த விவகாரத்தில் சபாநாயகர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. சபாநாயகரின் நிர்வாக முடிவில் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்திரவிட்டனர்.

மேலும் படிக்க