• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் கோவில்கள் திறப்பு

September 1, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலையத் துறை சார்ந்த கோயில்கள் அனைத்தும் இன்று முதல் தரிசனம் செய்திட திறக்கப்பட்டது.இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த நான்கு மாதங்களாக அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் கோயில்களில் வழக்கம்போல பூஜைகளும் ஆராதனைகளும் நடந்து வந்தன. மேலும் கோயில் திருவிழாக்களுக்கும் தடை செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் அரசின் நடைமுறைகளைப் பின்பற்றி கோயில்களில் பக்தர்களை அனுமதிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது.இதன்படி இன்று காலை முதல் பக்தர்கள் சில வழிகாட்டுதல்கள் படி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து வரும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். கோயில் நுழைவு வாயிலில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சானிடைசர் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதற்காக அனைத்து கோயில்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் அதிக கூட்டம் வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதன் இடையே இன்று ராகு கேது பெயர்ச்சி என்பதால் நல்ல நேரம் பார்த்து சிறப்பு பூசைகளுடன் கோவில் திறக்கப்பட்டது.

மேலும் படிக்க