• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

October 1, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 4750 தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் , நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் , தமிழ்நாடு அரசின் மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மேயர் அவர்களின் சீரிய முயற்சியால் கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை ( 2022)முன்னிட்டு,மாநகராட்சிக்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ .3750 / – போனஸ் தொகை வழங்கப்படும்.இதன் மூலம் 4750 தூய்மைப் பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க