• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.ஜே.கே கட்சி சார்பில் மின் கட்டணம், ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

August 5, 2022 தண்டோரா குழு

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கோவை மாவட்டத்தில் மின் கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி வரி உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து மாநில இணை பொதுச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் குறித்து மாநில இணை பொதுச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் கூறுகையில்,

மக்கள் அன்றாடம் சாப்பிடும் அரிசியிலும் ஜி.எஸ்.டி வரி புகுந்து விட்டது.இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும், மாநில அரசாங்கம் மின்கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. சொத்து வரியையும் உயர்த்தி உள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து அவற்றிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஐ.ஜே.கே கட்சி
கோவை மாவட்ட மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் குளோரி ஜான்பிரிட்டோ, கோவை மாவட்ட மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் நூர் பாத்திமா,கோவை மாநகர மாவட்டத் தலைவர் வடக்கு மண்டலம்
பி.கே. அந்தோணிசாமி, கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எர்னஸ்ட் ராபின், கோவை மாநகர மாவட்ட தலைவர் முத்துச்செல்வம், மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் முருகேசன் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க