• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராஜினாமா

April 16, 2018 தண்டோரா குழு

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

ஹைதராபாத்தில் மெக்கா மசூதியில் கடந்த 2007ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், 8 பேர் கொல்லப்பட்டனர். 58 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக சாமியார் அசீமானந்தா, மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ்.சின் முன்னாள் பிரச்சாரகர்கள் சுனில் ஜோஷி, சந்தீப் டாங்கே, ஆர்எஸ்எஸ் தொண்டர் ராமச்சந்திர கல்சங்க்ரா, தேஜ்ராம் பார்மர், அமித் சவுகான் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் சுனில் ஜோஷி வழக்கு விசாரணையில் இருந்தபோதே மர்மமான முறையில் கொல்லப்பட்டு விட்டார். சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்க்ரா ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். தேஜ்ராம் பார்மர், அமித் சவுகான் ஆகியோர் தொடர்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட, எஞ்சிய 5 பேரின் தொடர்பு குறித்த வழக்கு விசாரணை ஹைதராபாத்தின் நம்பள்ளியில் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அசீமானந்தா உள்ளிட்ட 5 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், இவ்வழக்கில் தீர்பளித்த நீதிபதி ரவீந்தர் ரெட்டி இன்று தனது பதவியை திடீரெ ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்துடன் 15 நாள் விடுமுறை கேட்டு நீதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க