• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏழு வருடங்களாக நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

February 10, 2023 தண்டோரா குழு

கோவையில் கடந்த 2012 ஆம் ஆண்டு சுமார் 2,100 கிலோ ரேஷன் அரிசியை கர்நாடகா மாநிலத்திற்கு கடத்த முயன்ற வழக்கில், கடந்த ஏழு வருடங்களாக நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு பழைய சந்தை கடை பகுதியைச் சேர்ந்த கட்டை நாசர்( 29) என்பவரை கோவை மண்டல குடிமை பொருள் பிரிவு காவல் கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவு பேரில் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன், ஆய்வாளர் மேனகா மற்றும் உதவியாளர் அர்ஜுன் குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தேடி வந்தனர்.

இதனிடையே நாசரை கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியில் கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 2013 – 2014ஆகிய காலங்களில் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசியை கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு கடத்தியதற்காக சுமார் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க