• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏர்டெல், வோடபோன்ன், ஐடியாவை சேர்ந்த 250 மில்லியன் வாடிக்கையாளர்கள் விரைவில் நீக்கம் செய்ய முடிவு

November 23, 2018 தண்டோரா குழு

ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜ் செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க உள்ளன.

இந்தியாவில் ஜியோ நிறுவனம் வருகைக்கு பின் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் பெரும் நஷ்டங்களை சந்தித்து வருகிறது. இதுமட்டுமின்றி மற்ற நெட்வர்க் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க ஜியோ நிறுவனம் பல்வேறு அதிரடி ஆபர்களை அளித்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் ஆர்வத்துடன் ஜியோ சிம் உபயோகிக்க தொடங்கினர். இந்த அதிரடி ஆஃபர்களால் ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற பெரிய நெட்வொர்க் பல கோடி இழப்பு ஏற்பட்டது. குறிப்பாக டூயல் சிம் வசதி வந்ததில் இருந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்த ஏர்டெல், வோடபோன் போன்றவைகளை இரண்டாம் சிம் ஆக தான் தற்போது பயன்படுத்துகின்றனர். இன்டர்நெட் வசதிக்கு கால் பேசுவதற்கு ஆஃபர்கள் அதிகம் உள்ள நம்பரை பயன்படுதிகொள்கின்றனர். முன்பு உள்ள காலத்தில் ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நெட்வொர்க் அதிகமாக மக்கள் பயன்படுத்தி வந்தனர். ரொம்ப நாட்களாக இதே நம்பரை வைத்து இருக்கின்ற காரணத்தால் இன்கம்மிங் வசதிக்காக மட்டுமே பயன்படுத்துவதால் அதற்கு ரீசார்ஜ் செய்வதையும் தவிர்த்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எல்லாம் பெயரளவில் மட்டுமே தங்களது நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதாகவும் மற்றபடி ரீசார்ஜ் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் நிறுவனங்கள் கருதுகின்றன. இதையடுத்து, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களுடைய 250 மில்லியன் வாடிக்கையாளர்களை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன.
இதன் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம் மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே போல், வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது பங்கிற்கு 150 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. நீக்கம் செய்யப்படும் சந்தாதாரர்கள் அனைவரும் 2ஜி வாடிக்கையாளர்கள் மட்டுமே.

ஏர்டெலுக்கு ஏற்பட்டுள்ள சுமை:

ஏர்டெல் நிறுவனம் மாதம் 35 ரூபாய் ரீசார்ஜ் குறைந்தபட்சமாக வைத்துள்ளது. ஆனால் 100 மில்லியன் சந்தாதாரர்கள் மாதம் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யாமல் சராசரியாக வெறும் 10 ரூபாய்க்கு மட்டுமே ரீசார்ஜ் செய்து வருகின்றனர்.அவர்களிடம் இருந்து வருடத்துக்கு 1,200 கோடி ரூபாய் ஏர்டெலுக்கு வருமானம் கிடைக்கிறது. அதில் பாதி பேர் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் கூட வருடத்துக்கு 2,100 கோடி ரூபாய் ஏர்டெலுக்கு லாபம் கிடைக்கும்.

வோடபோன் ஐடியாவின் தற்போதைய நிலைமை:

ஏர்டெலை விட வோடபோன் ஐடியா நிறுவனத்தில் தான் ரீசார்ஜே செய்யாத வாடிக்கையாளர்கள் அதிகம். வோடபோனும் ஐடியாவும் தனித்தனி நிறுவனங்களாக முன்பு இருந்தது. ஆனால் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட போட்டி காரணமாக தற்போது இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து செய்யல்பட்டு வருகிறது
வோடபோன் ஐடியாவிலும் கூட மாதம் 35 ரூபாய் ரீசார்ஜ் தொடங்குகிறது. ஆனால் 150 மில்லியன் வாடிக்கையாளரகள் 35 ரூபாய்க்கு கூட ரீசார்ஜ் செய்யாமல் உள்ளனர். சராசரியாக 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்கின்றனர். அவர்களிடம் இருந்து வருடத்துக்கு 1,800 கோடி ரூபாய் ஏர்டெலுக்கு வருமானம் கிடைக்கிறது. இதனால் பல கோடி இழப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதில் பாதி பேர் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் கூட வருடத்துக்கு 3,144 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்.
ஆனால் ஆரம்ப திட்டமான 35 ரூபாய்க்கு கூட 250 மில்லியன் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வது இல்லை இதனால் இவர்களை நிக்க உள்ளதாக ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க