• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏடிஎம் வளாகத்தில் கிடந்த காகிதங்களை அகற்றும் மூன்று வயது சிறுமி

January 1, 2021 தண்டோரா குழு

பல்லடம் பகுதியில் உள்ள ஏடிஎம் வளாகத்தில் கிடந்த காகிதங்களை எடுத்து மூன்று வயது சிறுமி குப்பை தொட்டியில் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பாபு அவரது குழந்தை புகழ்யா(3) வுடன் நேற்று தாராபுரம் சென்று கொண்டிருக்கையில் பல்லடம் பகுதியில் உள்ள ஏடிஎம் வளாகத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.அப்போது அவருடனே சென்ற குழந்தை புகழ்யா ஏடிஎம் வளாகத்தில் கீழே கிடந்த காகிதங்களை எடுத்து அருகில் இருக்கும் குப்பை தொட்டிக்குள் போட்டுள்ளார். இதனை குழந்தையின் தந்தை பாபு அவரது செல்போனில் பதிவு நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி குழந்தை புகழ்யாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. குழந்தை தான் ஏதும் சொல்லாமலே இவ்வாறு செய்தது எனக்கே ஆச்சரியமாக உள்ளது என்று குழந்தையின் தந்தை தெரிவித்தார்.பெரும்பாலான ஏடிஎம் வளாகங்களில் குப்பை தொட்டிகள் இருந்தும் பெரியவர்கள் கூட காகிதங்களை குப்பை தொட்டிக்குள் வீசாமல் செல்லும் போது மூன்று வயது குழந்தை அந்த காகிதங்களை எடுத்து குப்பை தொட்டிக்குள் போட்டு சுத்தம் செய்தது காண்போரை புன்னகைக்க வைக்கிறது.

மேலும் படிக்க