• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் ரூ.3.70 லட்சம் மோசடி -சைபர் கிரைம் போலீசார் விசாரணை

December 21, 2022 தண்டோரா குழு

கோவையில் ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் ரூ. 3.70 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் தனியார் வங்கி கிளைக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 5 மற்றும் 6ம் தேதிகளில் ஒரே ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 39 பரிவர்த்தனைகளில் ரூ. 3.73 லட்சம் பணம் எடுக்கப்பட்டது. மோசடி கும்பல் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பணத்தை தங்களது வங்கி கணக்கில் வரவு வைத்து இந்த மோசடியை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் வங்கி நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம்மில் பணம் எடுத்து மோசடி செய்த கும்பலை தேடி வருகிறார்கள்.

மேலும் படிக்க