• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏடிஎம் மிஷினில் பணத்துக்கு பதிலாக கொழுக்கட்டை !

September 20, 2018 தண்டோரா குழு

விநாயகர் சதுர்த்தி கடந்த செப்டம்பர் 13 வியாழன் அன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, இந்தியா முழுவதும் விதவிதமாக விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் வகையில் மஹாராஷ்டிரா புனேவில் சஹாகர் நகரில் ஏடிஎம் மிஷனில் பணத்திற்க்கு பதிலாக கொழுக்கட்டை வரும் வகையில் சஞ்சீவ் குல்கர்னி என்ற இளைஞர் புதிய மிஷின் ஒன்றை உருவாக்கி உள்ளார். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த மிஷினில் ஏடிஎம் கார்டை செலுத்தினால் பணம் வருவதற்க்கு பதிலாக கொழுக்கட்டை வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது அந்த மிஷினின் உள்ளே சிறிய அளவிலான விநாயகர் சிலையையும் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இளைஞர் குல்கர்னி கூறுகையில்,

நம் கலாச்சாரத்தையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் வகையில் இந்த புது முயற்சி மேற்கொண்டுள்ளேன் என்றார்.

மேலும் அவரிடம் கொழுக்கட்டை மட்டுமல்லாமல் நுகர்வோருக்கு பயன்படும் மற்ற பொருட்களுக்காகவும் இதுபோன்ற எந்திரங்களை உருவாக்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டனர். குல்கர்னியின் இந்த புதுவித முயற்சியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க