• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் கோவை ரயில்வே பணிமனையில் கண்டன ஆர்ப்பாட்டம்

August 8, 2020 தண்டோரா குழு

இரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் கோவை ரயில்வே பணிமனையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை டிவிட்டர் மூலமாக தேசத்தை காப்போம் , ரயில்வே துறையை காப்போம் என்ற வாசகத்துடன் ரயில்வே அமைச்சருக்கு செய்தி அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில் கோவை கூட்செட் ரோட்டில் உள்ள ரயில்வே பணிபனையில் எஸ்.ஆர்.எம்.யூ மற்றும் ஏ.ஐ.ஆர்.எப் தொழிற்சங்கத்தினர் டி.ஏ முடக்கப்பட்டதை வாபஸ் பெற வேண்டும், ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படுவது, ரயில் ஓட்டுநர் (லோகோ பைலெட்) தனியார் மூலம் தேர்ந்தெடுப்பது, 50 % பணிகளை தனியாருக்கு வழங்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.முகக்கவசம் , சமூக இடைவெளியுடன் நடந்த போராட்டத்தின் போது பேசிய நிர்வாகிகள் மத்திய அரசு தனியார் மயக்கொள்கையை கைவிடும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க