• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எல்லா சந்திப்பிலும் அரசியலே இருக்கும் இன்று நினைக்ககூடாது – பியூஸ் கோயல்

February 19, 2019 தண்டோரா குழு

எல்லா சந்திப்பிலும் அரசியலே இருக்கும் இன்று நினைக்ககூடாது என பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை முடிந்த பின்னர் பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கோயலுடன் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், முரளிதரவ் ராவ் ஆகியோர் உடனிருந்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த பின்பு பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர்,

இந்த சந்திப்பிற்கு பின் எந்த அரசியலும் கிடையாது. மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பாஜக தேமுதிக தேர்தல் கூட்டணி குறித்த பேச்சு தொடர்ந்து நடந்து வருகிறது. எல்லா சந்திப்பிலும் அரசியலே இருக்கும் இன்று நினைக்ககூடாது. தனிப்பட்ட முறையில் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் பெற வாழ்த்துகூறவே வந்தேன். பிரதமர் மோடி விஜயகாந்தின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். விஜயகாந்தின் உடல் நலம் குறித்து மட்டுமே நாங்கள் பேசினோம். விஜயகாந்த் என்பது பழைய நண்பர்: எங்கள் நட்பும் எங்களுக்கு முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க