• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

எலியால் 9 மணி நேரம் தாமதமாக கிளம்பிய விமானம்

August 28, 2017 தண்டோரா குழு

புதுதில்லியிலிருந்து அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்யவிருந்த எர் இந்தியா விமானத்தில் எலியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், விமானம் 9 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

புதுதில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்திலிருந்து அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ நகருக்கு பயணம் செய்ய Boeing 777 நேரடி விமானம் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் எலி ஒன்று அங்கும் இங்கும் ஓடுவதை பயணிகள் கவனித்து, விமான ஊழியர்களுக்கு தகவல் தந்தனர்.

உடனே விமானத்தின் பொருளாதார வகுப்பிலிருந்த 172 பயணிகளும், வணிக வகுப்பில் பயணித்த 34பயணிகளும் கீழே இறக்கிவிடப்பட்டனர். விமானத்திலிருந்த எலியை நச்சு வாயு மூலம் அழிக்க சுமார் 6 நேரம் ஆகியது.

இதனால் விடியற்காலை சுமார் 2௦ மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 9 நேரம் தாமதமாக கிளம்பியது.

விமானம் அவ்வளவு தாமதமாக கிளம்பியது, பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

“கேட்டரிங் வாகனங்கள் மூலம் தான், எலிகள் விமானத்திற்குள் நுழைகின்றன. அவைகளை நச்சு வாயு மூலம் அழிக்காவிட்டால், விமானத்திலிருக்கும் மின்சார கம்பிகளை கடித்துவிடும், இதனால் விமானத்தை இயக்கும்போது, கட்டுபாட்டை இழந்துவிடும்” என்று இந்திராகாந்தி சர்வதேச விமானநிலைய அதிகாரி தெரிவித்தார்.

மேலும் படிக்க