• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்.ஐ.ஏ விசாரணை தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகள் மாநகர காவல் ஆணையரிடம் மனு

June 14, 2019 தண்டோரா குழு

கோவையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு என்.ஐ.ஏ அதிகாரிகள் உக்கடம், கரும்புக்கடை, அன்பு நகர் உள்பட 7 இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து 6 பேரை கைது செய்தனர். அதில் சிலருக்கு இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக அறிக்கையையும், அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் செல்போன்கள், மடிக்கணினிகள், பென்டிரைவ் உள்பட பல்வேறு பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழக போலீசாரும் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 க்கும் மேற்பட்ட இசுலாமிய அமைப்பினர் இன்று கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளரை சந்தித்து மனு அளித்தனர்

அம்மனுவில், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் ISIS என்ற அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறி நள்ளிரவு நேரம் அல்லது அதிகாலை நேரம் என அத்துமீறி நடந்து கொள்கின்றனர். தேவை யில்லாமல் ஊடகங்களுக்கு தவறான தகவல்கள் தருகின்றனர். கோவையில் ஒரு சமூக நல்லிணக்கம் அமைய வேண்டும் என இசுலாமிய அமைப்புகள் நடந்து வருகின்றன. பொது சமூகத்தின் மத்தியில் ஒரு வெண்டாத் சூழ்நிலையை ஏற்படுத்த அரசியல் காரணங்களுக்காக இந்த nia அமைப்பு நடந்து கொள்கிறது என கூறப்படுள்ளது.

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பின் சார்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத், JAQH,மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, WPI, ஆகியோர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் கமிஷனரை சந்தித்து மனு அளித்தார்கள்

மேலும் படிக்க