• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எதிர்கட்சிகள் கடும் அமளி: ஜனவரி 2ம் தேதி வரை ராஜ்யசபா ஒத்திவைப்பு

December 31, 2018 தண்டோரா குழு

முதலாக் தடை மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் ராஜ்யசபா முடங்கியது.

முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்-2018 ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின் படி ‘முத்தலாக்’ முறையில் மனைவியை விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்றும், இதன்மூலம் கணவருக்கு 3 வருடங்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு, விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு ஜாமீன் வழங்குவது உள்பட சில திருத்தங்களை செய்தது. எனினும் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப் படவில்லை. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் இதற்காக சில திருத்தங்களையும் சேர்த்து ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதும் முத்தலாக் அவசர சட்ட மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி இந்த மசோதா மீது கடும் விவாதம் நடந்தது. பின்னர் நடந்த ஓட்டெடுப்பில் 245 எம்.பி.,க்கள் ஆதரவுடன் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது.

இந்நிலையில், இந்த மசோதாவை இன்று ராஜ்யசபாவில் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று தாக்கல் செய்தார். இன்று காலை மாநிலங்களவை தொடங்கி அலுவல்கள் வாசிக்கத் தொடங்கியதும், அதிமுக எம்.பி.க்கள் மேகதாது அணை விவகாரத்தை எழுப்பினார்கள், அவர்களுக்கு ஆதரவாக திமுக எம்.பி.க்களும் கோஷமிட்டனர். தமிழகத்துக்கு நீதி தேவை என்று இரு கட்சி எம்பிக்களும் கூட்டாக முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். அதிமுக, திமுக எம்.பி.க்களும் முழக்கமிட்டு, தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவையை நண்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உத்தரவிட்டார்.

பின்னர் அவை 2 மணிக்கு தொடங்கியது. இவர்களை தொடர்ந்து ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேசம் எம்.பி.க்களும், மற்றும் காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் போன்ற எதிர்கட்சி எம்.பி.கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். அதனால், 15 நிமிடங்களுக்கு அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். பின்னர் மீண்டும் அவை தொடங்கியதும் பல்வேறு பிரச்சனைகளை மையமாக வைத்து எதிர்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வரும் ஜனவரி.2ம் தேதி வரை ராஜ்யசபாவை ஒத்திவைப்பதாக துணை சபாநாயகர் அறிவித்தார்.

மேலும் படிக்க