• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் அனுமதி

September 17, 2018 தண்டோரா குழு

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்..ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள காட்டுபாவாபள்ளிவாசல் கிராமத்திற்குட்பட்ட மெய்யபுரம் பகுதியில் உள்ள கோயிலில் இருந்து நேற்று முன்தினம் விநாயகர் சிலையை தேவாலயம் உள்ள பகுதி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு வந்த பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா நீதிமன்றம், போலீசார், இந்து அறநிலையத்துறையை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்தார்.

உயர்நீதிமன்றத்தை தரக்குறைவான வார்த்தைகளால் ஹெச்.ராஜா விமர்சித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, நீதிமன்றம், போலீசாரை பற்றி அவதூறாக பேசிய பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட 18 பேர் மீது திருமயம் காவல்நிலையத்தில் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தை தரக்குறைவான வார்த்தைகளால் ஹெச்.ராஜா விமர்சித்ததாக ராஜசேகர் என்பவரும், காங்கிரசைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதா என்பவரும் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

இதனை ஏற்ற நீதிமன்றம், பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது.அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க