• Download mobile app
05 Jun 2025, ThursdayEdition - 3403
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

எங்களை வியாபாரம் நடத்த விடுங்கள் மன்றாடும் கோவை காய்கறி வியாபாரிகள்

June 2, 2020 தண்டோரா குழு

வியாபாரம் நடத்தாமல் வாழ்வாதாரம் முடங்கி கிடப்பதாகவும், மாநகராட்சி கொடுக்கும் கட்டுப்பாடுகளை பின்பற்றி வியாபாரம் செய்யப்படும் என்றும், தொழில் நடத்த அனுமதி வேண்டும் என்றும் கோரி கோவை டி.கே மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை பெரியகடை வீதி பகுதியில் தியாகி குமரன் மார்க்கட் கடந்த 1930ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் 450 கடைகள் உள்ளன. கொரோனா ஊரடங்கால் இதில் 50 கடைகள் மட்டுமே திறக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மற்ற வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர். அனைத்து கடைகளை திறக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மற்றும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து டி.கே மார்க்கெட் அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“கடந்த 65 நாட்களாக எங்கள் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம்.இந்த சூழலில் 50 கடைகள் மட்டும் திறந்தால் எங்கள் ஒற்றுமை சீர்குலையும். இங்குள்ள அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி கொடுக்க வேண்டும். மாநகராட்சி கொடுடுக்கும் அனைத்து விதிமுறைகளையும் முறையாக கடைபிடித்து தொழில் நடத்துவோம். எங்களை தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்.” இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

மேலும் படிக்க