• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எங்களிடம் பாதுகாப்பான ரிசார்ட்டுகள் உள்ளன கர்நாடக எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்த கேரளா சுற்றுலாத்துறை.!

May 15, 2018 தண்டோரா குழு

எங்களிடம் பாதுகாப்பான ரிசார்ட்டுகள் உள்ளன என கர்நாடக எம்.எல்.ஏ-க்களுக்கு கேரளா சுற்றுலாத்துறைஅழைப்பு விடுத்துள்ளது.

224 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு 12-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் 78 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.104 தொகுதிகளை வென்று பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 112 தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை.இதனால் பா.ஜ.க அங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியும் மதசார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், கர்நாடக எம்.எல்.ஏ-க்களுக்கு கேரளா சுற்றுலாத்துறைஅழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக கேரளா சுற்றுலாத்துறை தனது டுவிட்டர் பக்கத்தில்,

கர்நாடக தேர்தல் களம் இழுபறி; எங்களிடம் பாதுகாப்பான, அழகான ரிசார்ட்டுகள் உள்ளன. கர்நாடக எம்.எல்.ஏக்கள் ஓய்வு எடுக்க இங்கே வரலாம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் படிக்க