• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஊரடங்கு காரணமாக வீட்டில் கொண்டாடப்பட்ட ரமலான் பண்டிகை !

May 25, 2020 தண்டோரா குழு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை அவரவர் வீட்டில் கொண்டாடப்பட்டது.

வழக்கமாக ரமலான் பண்டிகையில் இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து பள்ளிவாசலுக்கு சென்று இறைவனை தொழுது ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்ளவர்.இனிப்புகளையும் உறவினர்கள்,அண்டை வீட்டார் அனைவருக்கும் வழங்கி மகிழ்வர்.ஆனால் தற்போது வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவில்கள்,பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் போன்றவை திறக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் இஸ்லாமிய சகோதரர்கள் இந்த ஆண்டு ரமலான் பண்டிகையை புத்தாடைகள் அணியாமலும் பள்ளிவாசலுக்கு செல்லாமலும், இனிப்புகளை வழங்காமலும் வீட்டில் இருந்த படி இறைவனை தொழுதனர்.இது போன்ற ரமலான் பண்டிகையை இதுவரை கொண்டாடியதில்லை என்றும் இது போன்று உறவினர்கள் இல்லாமல் கொண்டாடுவது வருத்தமாக உள்ளதென்றும் தெரிவித்தனர். அதே சமயத்தில் மக்களின் நலனுக்காக இது போன்று கொண்டாடுவதில் தவறில்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க