• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஊரடங்கில் உற்பத்தி துறை சார்ந்த தொழில்களுக்கு விலக்கு – தமிழக அரசுக்கு டாக்ட் நன்றி

January 7, 2022 தண்டோரா குழு

ஊரடங்கில் உற்பத்தி துறை சார்ந்த தொழில்களுக்கு விலக்கு அளித்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கில் உற்பத்தி துறை சார்ந்த தொழில்களுக்கு விலக்கு அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி. மேலும் தொழில் துறை சார்ந்த தொழிலாளிகள் கட்டாயமாக வேலைக்கு செல்லும்போது அடையாள அட்டை வைத்து இருக்க வேண்டும் என்று அரசு வழிகாட்டி உள்ளது.

எங்களை போன்ற குறுந்தொழில் முனைவோர்களுக்கும், பணிபுரிகின்றவர்களுக்கும் பெரும்பாலும் அடையாள அட்டை இருப்பது இல்லை. இந்த சூழ்நிலையில் இரவு பணி முடிந்து வீட்டுக்கு போகும் தொழிலாளிகள் மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் வகையில் மாவட்ட நிர்வாகம் கோவையில் உள்ள குறுந்தொழில் நிறுவனங்களுக்கு உதவிட வேண்டும்.

கடும் நெருக்கடிகளை குறுந்தொழில் முனைவோர் சந்தித்து வரும் நிலையில் தொழில் தடையில்லாமல் இயங்கிட தொழில் முனைவோர்களும், தொழிலாளர்களும் பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் வழிகாட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க