July 2, 2019
தண்டோரா குழு
தமிழகத்தில் ஊடக விவாதங்களில் பாஜக சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழிசை சௌந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள், கட்சிகளின் நிலைப்பாடுகளையும், கருத்துக்களையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு மிகவும் பயளிப்பதாக உள்ளது. ஆனால் சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும், சம வாய்ப்பும் இல்லாததால் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் பிரநிதிகள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என முடிவு செய்ப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
இந்த தடை உத்தரவு ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.