• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஊஞ்சலில் விளையாடிய சிறுமி துண்டு கழுத்தில் இறுகி உயிரிழப்பு !

July 9, 2020 தண்டோரா குழு

ஊஞ்சலில் விளையாடிய சிறுமி துண்டு கழுத்தில் இறுகி மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சிங்காநல்லூர் அருகில் உள்ள நீலிக்கோணாம்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர்.அருள்ஞான ஜோன்ஸ்-நிஷா.
அருள்ஞான ஜோன்ஸ்வளைகுடா நாட்டில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.தற்போது கொரோனா தொற்று காரணமாக கோவை வந்துள்ளார்.இவரது மனைவி நிஷா அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.இவர்களது மகள் ஜெர்லின் மேகா(9)தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் உள்ள ஊஞ்சலில் சிறுமி விளையாடி வந்துள்ளார். இவரது பெற்றோர்கள் வீட்டின் உறங்கி கொண்டு இருந்தனர்.ஊஞ்சலில் உள்ள இரும்பு சங்கிலியில் ஒரு துண்டை கட்டி ஏறி விளையாடிய போது துண்டு சிறுமியின் கழுத்தை சுற்றி இறுகியதில் மரணம் அடைந்துள்ளார். தற்செயலாக சிறுது நேரம் கழித்து வெளியில் வந்த பார்த்த பெற்றோர்கள் மகள் ஊஞ்சலில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து சிறுமியை சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறயுள்ளனர்.இதனை கேட்டு பெற்றோர்கள் கதறி அழுதனர்.சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை மருத்துவமனையில் வைக்கபட்டு உள்ளது.ஊஞ்சலில் துண்டு இறுகி சிறுமி இறந்த சம்பவம் அருகில் வாசிப்பவர்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க