• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பி யில் புதுமண தம்பதிகளுக்கு பரிசாக காண்டம்!

July 6, 2017 தண்டோரா குழு

புதுமணத்தம்பதிகளுக்கு பரிசு பொருட்களுடன் ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரை அடங்கிய பெட்டியை வழங்க உத்தரபிரதேஷ் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை நாளாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து
உத்தர பிரதேஷ் மாநிலத்தில் மிசின் பரிவார் விகாஸ் திட்டம் ஒன்றை தொடங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் புதுமண தம்பதிகளுக்கு தரப்படும் திருமண பரிசுகளுடன், அம்மாநில அரசும் பாதுகாப்பான உடல் உறவு மற்றும் குடும்ப கட்டுப்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அறிந்துக்கொள்ளும் விதமாக, அவர்களுக்கு பரிசு தந்துள்ளது.

அதன்படி, அம்மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார அமைப்பு(ASHA) உறுப்பினர்கள் புதுமண தம்பதியினருக்கு அந்த பரிசை வழங்குவார்கள். அந்த பரிசு பெட்டியில் ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள், டவல், கைக்குட்டை, நகம் வெட்டும் கருவி, சீப்பு மற்றும் கண்ணாடி ஆகியவை அதில் இருக்கும்.

அதோடு குடும்பக்கட்டுப்பாடு, பாதுகாப்பான உடல் உறவு, மற்றும் குழந்தை பிறப்பு இடைவெளி ஆகியவற்றை விவரிக்கும் சுகாதார துறையின் கடிதமும் அதில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க