• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பி யில் நோயாளிகள் ஆம்புலன்ஸில் செல்ல ஆதார் கார்டு கட்டாயம்

June 20, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேசம் மாநிலத்தில் நோயாளிகளை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல வேண்டுமானால் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் பல பகுதிகளில் ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்படுவதால், மக்கள் பல வேதனையான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், அந்த சேவையை இன்னும் கடினமாக மாற்ற உத்தர் பிரதேஷ் மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஒருவருக்கு ஆம்புலன்ஸ் இலவச சேவை பெறுவதற்கு ஆதார் அட்டையை கட்டாயமாகியுள்ளது.

நோயாளியை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றால், அந்த நோயாளியின் வீட்டாரோ அல்லது உறவினர்களை அவர்களின் ஆதார் அட்டையை காட்டினால் மட்டுமே நோயாளியை ஆம்புலன்ஸில் ஏற்றப்படுவார்கள்.

இது குறித்து உ.பி சுகாதார அதிகாரிகள் கூறுகையில்,

“ஆதார் அட்டையை கட்டயமாகப்படுவதால், வாகனங்களில் மோசடி பயன்பாட்டை குறைக்க உதவும். அதோடு, போலி பயணங்கள் மற்றும் எரிப்பொருள் பணத்தை வீணாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செலவு செய்கின்றனர். இது போன்ற தவறான செயல்களால் ஆதார் அட்டை கட்ப்படாயமாக்கப்படுகிறது.” என்று கூறினார்.

மேலும்க கடந்த மாதம், உத்தரபிரதேஷ் மாநிலத்தின் எட்டாவா மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையினல் மருத்துவர்கள் உதவி அளிக்காத காரணத்தால், ஏழை தொழிலாளர் ஒருவர் தனது 15 வயது மகனை தனது தோளில் சுமந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது.

அதே போல், அதே மாநிலத்தின் குஷம்பி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையிலிருந்து தனது தம்பியின் 7 மாத பெண் குழந்தையின் உடலை ரிக்க்ஷா மூலம் வீட்டுக்கு கொண்டு செல்ல நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க