• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்பட்டாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் – கமல்ஹாசன்

April 24, 2018 தண்டோரா குழு

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்பட்டாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாதிரி கிராம சபை கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த மாதிரி கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய கமல்ஹாசன்,

“கிராம சபை என்பது போர் அடிக்கும் ஒரு நிகழ்ச்சியாக நகரத்தில் வாழ்பவர்களுக்குத் தோன்றலாம். இது வயலும்,வாழ்வும் ஏன் நகரத்தில் வாழ்பவர்களும் சம்பந்தப்பட்டது.கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ. 1 முதல் ரூ.5 கோடி வரை நிதியானது கிராம மக்கள் தொகை,கிராம பஞ்சாயத்தின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது.

நம்முடைய தமிழகத்தில் 12,526 கிராமங்கள் இருக்கின்றன.அதை நீங்கள் கோடிகள் மூலம் பெருக்கிப் பார்த்தால் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி 5 ஆண்டுகள் என்றால் எவ்வளவு என நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.நகரத்திலே பிறந்து நகரத்திலே ஜொலிப்பவர்கள் கொஞ்சம் பேர் தான்,மீதி அனைவருமே கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான்.முக்கால்வாசிப்பேர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான்,இங்கு நடப்பவற்றை கிராமத்தில் இருக்கும் உங்கள் உறவினர்களிடம் கொண்டு செல்லுங்கள்.

கிராம சபை கூட்டங்கள் காலகட்டத்திற்கு ஏற்ப மாறிவிட்டது,கிராம சபை கூட்டங்கள் நடந்தே ஆக வேண்டும்.கிராமத்தினர் முன்னிலையில் வைத்து கணக்கு பார்க்க வேண்டும்,அப்படி செய்யும் போது ஊழல் ஒழியும்.ஊழல் ஒழிப்பு என்பது ஒரே நாளில் செய்வது அல்ல முதலில் குறைப்பு,பின்பு தடுப்பு அதற்கு பின்னர் தான் ஒழிப்பு.அதை செய்வதற்கான அற்புதமான கருவியை கையில் வைத்துக்கொண்டு செய்யாமல் இருக்கிறோம்.

25 ஆண்டுகளாக இதுபோன்ற கிராம சபை கூட்டங்களை நடத்தி இருந்தால் தமிழகத்தின் முகம் மாறி இருக்கும்.சில கட்சிகள்,அமைப்புகள் முயன்று பார்த்தனர்.ஆனால் மறந்தது மறந்தபடி அப்படியே இருக்கிறது.இப்போது நினைவுபடுத்தும் நாள் அதிகாரத்தில் இருப்பவர்கள் இதை செய்தே ஆக வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தும் நாள் இது.இங்கு மாதிரி கிராம சபை கூட்டத்தை மக்களுக்கும் ஊடகங்களுக்கும் நடத்தி காட்டுகிறோம் இதனை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.

கிராம பஞ்சாயத்து என்பது ஊற்று போல அதில் சாக்கடையை கலக்க விட்டுவிட்டோம், அதனை சுத்தம் செய்து மீண்டும் ஊற்று வரவைக்க வேண்டும்.உடனடியாக எடுத்து நீரை பருகிவிட முடியாது அந்த தண்ணீரை வயலுக்கு விட்டுவிட்டு நாம் வாயில் வைப்பதை நல்ல தண்ணீராக வைப்போம்.
25 வருடமாக நம் கையில் இருக்கும் நல்ல ஆயுதம் இது, அடிமட்ட மக்கள் வரை சென்று சேரும்.

மக்கள் நீதி மய்யம் மேல்தட்டு கட்சியில்லை,இங்கிருந்து தான் எங்கள் பலம் என்பதை நான் முழுவதுமாக உணர்ந்ததால் தான் இந்த நிகழ்ச்சியில் பங்குதாரராக வந்திருக்கிறேன்.காவிரி விவகாரத்தில் கிராம பஞ்சாயத்தில் இருப்பவர்களின் குரல் வலுத்தால் இதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை நாடாளுமன்றத்திற்கு இருக்கிறது.

பிரித்தாளும் அரசியலால் கிராம பஞ்சாயத்துகள் வலுவிழந்துவிட்டன.இதே கிராம பஞ்சாயத்துகள் கர்நாடகத்திலும் இருக்கிறது.அவர்களிடமும் பேசினால் அவர்களுக்கும் புரியும் இந்த அளவில் இருந்து எடுத்துக்கொண்டு போனால் நிச்சயம் முடியும் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

நமது கவனமின்மையால் செயல்படுத்த முடியாமல் போன கிராம சபை கூட்டத்தை,மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்துள்ளது.கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.மக்கள் நீதி மய்யம் மேல்தட்டு மக்களுக்கான கட்சி அல்ல,கிராமத்தில் இருந்துதான் தொடங்குகிறது.வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ளோம்”.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க