• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக யானைகள் தினத்தையொட்டி கோவையில் விழிப்புணர்வு பேரணி

August 12, 2022 தண்டோரா குழு

உலக யானைகள் தினத்தையொட்டி கோவையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை வனகோட்டம் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்படி, மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் தலைமையில் யானைகள் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாவட்ட வன அலுவலர் வளாகத்தில்
பேரணி தொடங்கிய நடைபெற்றது.

தமிழ்நாடு வனத்துறையினருடன் இணைந்து வன உயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை WNCT & Wgwct நடைபெற்ற பேரணியில் கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி மற்றும் SNS டாக்டர் ராஜலட்சுமி கல்லூரி மாணவ, மாணவியர்கள் உதவி வன பாதுகாவலர் செந்தில் குமார், வன உயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் சாதிக் அலி ஒருங்கிணைப்பாளர் சிராஜ் தீன், ஜெனோ வில்சன்,மோகன் வனச்சரக அலுவலர்கள் அருண், செல்வராஜ் ,செந்தில்,சந்தியா மற்றும் வன ஊழியர்கள் வன வேட்டை தடுப்பு கவாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட மாணவ, மாணவியர்கள் யானை முகம் வேஷமிட்டு பேரணியில் பங்கேற்றனர்.பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த நிகழ்வில் கோவை வனகோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய வன ஊழியர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது

மேலும் படிக்க