• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக மருந்தாளரின் தினம் – விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர்

September 25, 2024 தண்டோரா குழு

கோவையில் மருந்து பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

உலக சுகாதாரத்தை பராமரிப்பதிலும், மேம்படுத்துவதிலும் மருந்தாளர்கள் வகிக்கும் முக்கிய பங்கை கௌரவிக்கும் விதமாக உலக மருந்தாளுநர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக இருமல், சளி, லேசான காய்ச்சல் போன்ற சிறிய பிரச்சனைகளுக்கு, மருத்துவரிடம் செல்வதற்குப் பதிலாக, பெரும்பாலும் உள்ளூர் மருந்தாளுநரை ஆலோசனையாக மேற்கொள்ளப்படுகிறது. நமது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய வீரராக உள்ள மருந்தாளர்கள் குறித்து அனைவரிடத்திலும் கொண்டு செல்லும் விதமாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மருந்தியல் கல்லூரி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கொடி அசைத்து துவக்கி வைத்தார். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மருந்து பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்த அனைவரிடத்திலும் கொண்டு செல்லும் விதமாக பதாகைகளை ஏந்தியபடி சுமார் மூன்று கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் படிக்க