• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக பூமி தினத்தை முன்னிட்டு மூலிகைச் செடி வழங்கிய கல்லூரி மாணவிகள்.!

April 22, 2022 தண்டோரா குழு

கோவை நிர்மலா கல்லூரியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மூலிகைச் செடி மற்றும் மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உலக பூமி தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் உலக வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகளை நட வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று கோவை சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா கல்லூரியில் உலக வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகளை நடுவோம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவிகள் சாலையில் சென்ற பொதுமக்களுக்கு மூலிகைச் செடி மற்றும் மரக்கன்றுகளை கொடுத்தனர்.

மேலும் பூமியை பாதுகாப்போம், இயற்கை வளங்களை பாதுகாப்போம், மரக்கன்றுகளை நடுவோம் என மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க