December 10, 2018
தண்டோரா குழு
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் 24-வது ஆளுநராக கடந்த 2016 ஆம் ஆண்டு உர்ஜித் படேல் நியமிக்கப்பட்ட உர்ஜித் படேல் இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் உர்ஜித் பட்டேல் விளக்கம் அளித்துள்ளார். உர்ஜித் படேல் பதவி விலகல் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்,
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு. ரிசர்வ் வங்கி துணை ஆளுநராகவும், ஆளுநராகவும் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதி நிலையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தியவர் உர்ஜித் படேல். அவர் வங்கிகளில் ஒழுங்கமைப்பை ஏற்படுத்தி அதனை உறுதியும் செய்தார் என பதிவிட்டுள்ளார்.