• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உரிமம் வழங்கும் வரை தண்ணீர் லாரிகளை இயக்க மாட்டோம் கோவை தண்ணீர் லாரி உரிமையாளர்கள்

August 21, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் இயங்கி வரும் தண்ணீர் லாரிகளுக்கு முறையான உரிமம் வழங்கும் வரை கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு தண்ணீர் விநியோக உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட தண்ணீர் லாரி உரிமையாளர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்,

தமிழகம் முழுவதும் 25000 லாரிகள் இயக்கபடுவதாகவும் கோவை மாவட்டத்தில் 3000 லாரிகள் இயங்கி வந்த நிலையில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து உள்ளதாக தெரிவித்தனர்.

இதனால் கல்வி நிலையங்கள், மருத்துவமனை,விடுதிகளில் தண்ணீர் தட்டுபாடு ஏற்படும் என தெரிவித்தனர். தமிழக அரசு தங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் படிக்க