February 14, 2019
தண்டோரா குழு
உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஒட்டு மொத்த நாடும் தோளாடு தோள் கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 70 வாகனங்களில் 2,500 சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகாரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். இந்த கார் வீரர்கள் சென்ற கான்வாயில் புகுந்தது. காரை மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 30 ஆக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டுள்ளனர்.
இந்நிலையில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஒட்டு மொத்த நாடும் தோளாடு தோள் கொடுக்கும். சி.ஆர்.பி.எப் வீரர்களின் உயிர் தியாகம் வீணாகாது என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதல் சம்பவம் குறித்து உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உயர் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
அதைபோல், சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது, கண்டிக்கத்தக்கது; மரணமடைந்த வீரர்களுக்கு நாடே வீரவணக்கம் செலுத்துகிறது என டுவிட்டரில் அருண் ஜெட்லி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பயங்கரவாத தாக்குதலில் 30 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நாளை ஸ்ரீநகர் செல்கிறார்.