• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ள நம்பர் பிளேட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம் !

December 29, 2018 தண்டோரா குழு

உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ள நம்பர் பிளேட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் வாகனங்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய நம்பர் பிளேட்டுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் படி 1989 மோட்டார் வாகன விதியில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இனிவரும் புதிய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு அம்சங்களோடு லேசர் பதிவெண் நம்பர் பிளேட்டுகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டம் வரும் 2019 ஏப்ரல் 1 முதல் புதிய நம்பர் பிளேட் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இந்த உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் மூலம் வாகனங்களை எளிதாக கண்காணிக்க முடியும் மேலும் திருடப்பட்ட வாகனங்களை விரைவில் போலீஸார் கண்டுபிடிக்க முடியும். இதன் முலம் வாகன திருட்டு குறைய வாய்ப்பு உள்ளது.இந்த உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் வாகன உற்பத்தியாளர்களும் டீலர்களும் அமல்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க