December 20, 2018
தண்டோரா குழு
உயர்நீதிமன்ற உத்தரவால் பொன்.மாணிக்கவேல் தப்பித்து வருகிறார் என அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுக்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் டி.ஜி.பி.யிடம் புகார் அளித்து உள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம்,
பொன்.மாணிக்கவேல் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு, யாரோ ஒருவரின் கைப்பாவையாக செயல்படுகிறார். பொன்.மாணிக்கவேல் நேர்மையானவர் என்று யார் சொன்னது? அரசு அதிகாரிகள் உள்நோக்கத்தோடு செயல்படக்கூடாது.
பொன்.மாணிக்கவேல் இதுவரை எத்தனை சிலைகளை கண்டுபிடித்துள்ளார், எத்தனை பேரை கைது செய்துள்ளார் என்பதை தெரிவிக்க வேண்டும். நேர்மையான அதிகாரி என்றால் குற்றச்சாட்டுகளுக்கு பொன்.மாணிக்கவேல் பதில் தர வேண்டும். பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவால் பொன்.மாணிக்கவேல் தப்பித்து வருகிறார் என்றார்.
மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது ஆளுநரின் கையில் தான் உள்ளது.கட்சிக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு துணை முதல்வரின் தம்பி ஓ.ராஜா நீக்கம் ஓர் உதாரணமாகும் என கூறியுள்ளார்.