• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயர்கல்வித்துறை செயலாளரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

January 7, 2019 தண்டோரா குழு

உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்து நாளை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை மாநகர காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரதியார் பல்கலை.,யில் தொலைத்தூர கல்வி மையங்களை வெளி மாநிலங்களில் திறப்பதை எதிர்த்து சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில் பாரதியார் பல்கலை.யில் தொலைதூர கல்வி மையத்தை துவக்க நீதிமன்றம் தடை விதித்தது. எனினும், நீதிமன்ற உத்தரவையும் மீறி பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மையங்களை துவக்கியதை எதிர்த்து உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் உள்ளிட்ட 8 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 8 பேர் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து, இன்று இந்த வழக்கில் மங்கத்ராம் தவிர மற்ற 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனால், உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்து நாளை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை மாநகர காவல்துறைக்கு நீதிபதி கிருபாகரன் அதிரடி உத்திரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க