• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உத்தர பிரதேச வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன், யானை, மான் படங்கள்

August 25, 2018 தண்டோரா குழு

புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் புகைப்படங்களுக்கு பதிலாக சன்னி லியோன், மான், புறா, யானை புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கியதற்கு பிறகு வாக்காளர் பட்டியலில் புகைப்பட மாற்றி அச்சிடப்படுவதும், பெயர் மாற்றி அட்டைகள் வழங்கப்படுவது தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. இதற்கிடையில், 2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன் புதிய வாக்காளர் சேர்க்கை நடைபெற்று, அதனை சரிபார்த்து, இறுதி பட்டியல் வெளியிடும் பணி நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் ஒரு பெண்ணின் புகைப்படத்துக்கு பதில், பிரபல இந்தி நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 2 பக்கங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யபட்டுள்ளது. அதில் 51 வயது பெண்ணின் புகைப்படத்துக்கு பதில் சன்னி லியோனின் படமும், 56 வயது ஆணின் படத்துக்கு பதில் யானை படமும் இடம்பெற்றுள்ளன. இதேபோல் மான், புறா ஆகியவற்றின் புகைப்படங்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இது போன்று பல வாக்காளர்களின் படங்களுக்கு பதில் காட்டு விலங்குகளின் படம் இடம்பெற்றுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதையடுத்து, இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க