• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

உத்தரபிரதேச சம்பவத்தை கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

October 3, 2020 தண்டோரா குழு

உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் இன பெண் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்திரபிரதேச மாநிலத்தில் தலித் இன பெண் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பலரும் கூறி வந்த நிலையில் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று உத்தரபிரதேச காவல்துறையினரால் கூறப்பட்டது. காவல் துறையினர் கூறியதை கண்டித்தும், சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையத்தின் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு பேரணி, அனைத்திந்திய மாணவர் சங்கம், தொழிற்சங்க கூட்டமைப்பு உள்ளிட்டோர் இணைந்து உத்தரப்பிரதேச அரசை கண்டித்தும் உத்தரபிரதேச காவல்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உத்தரபிரதேச காவல்துறையினரை கண்டித்தும் முதல்வர் யோகியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ள தலித் இன பெண்ணின் சம்பவமானது நிர்பயா சம்பவத்தினை நினைவுபடுத்துகிறது. உத்திரபிரதேச மாநிலமானது பிஜேபி ஆளுகின்ற மாநிலம், அங்கு மகளிருக்கான பாதுகாப்பு என்பதே இல்லை என்ற நிலைமை வந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தின் டிஜிபி அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. தற்பொழுது உள்ள பாஜக அரசால் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கும் தலித் இன பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற நிலை இருந்து வருகிறது இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு நீதி வாங்கி தர வேண்டும் இந்த விவகாரத்தில் தேசிய பெண்கள் ஆணையம் தலையிடாமல் இருப்பது வெட்கக் கேடான ஒன்று. எனவே இதில் உடனடியாக தேசிய பெண்கள் ஆணையம் தலையிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க