உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் இன பெண் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் தலித் இன பெண் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பலரும் கூறி வந்த நிலையில் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று உத்தரபிரதேச காவல்துறையினரால் கூறப்பட்டது. காவல் துறையினர் கூறியதை கண்டித்தும், சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையத்தின் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு பேரணி, அனைத்திந்திய மாணவர் சங்கம், தொழிற்சங்க கூட்டமைப்பு உள்ளிட்டோர் இணைந்து உத்தரப்பிரதேச அரசை கண்டித்தும் உத்தரபிரதேச காவல்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உத்தரபிரதேச காவல்துறையினரை கண்டித்தும் முதல்வர் யோகியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ள தலித் இன பெண்ணின் சம்பவமானது நிர்பயா சம்பவத்தினை நினைவுபடுத்துகிறது. உத்திரபிரதேச மாநிலமானது பிஜேபி ஆளுகின்ற மாநிலம், அங்கு மகளிருக்கான பாதுகாப்பு என்பதே இல்லை என்ற நிலைமை வந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தின் டிஜிபி அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. தற்பொழுது உள்ள பாஜக அரசால் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கும் தலித் இன பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற நிலை இருந்து வருகிறது இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு நீதி வாங்கி தர வேண்டும் இந்த விவகாரத்தில் தேசிய பெண்கள் ஆணையம் தலையிடாமல் இருப்பது வெட்கக் கேடான ஒன்று. எனவே இதில் உடனடியாக தேசிய பெண்கள் ஆணையம் தலையிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு