• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க கோவையில் உருக்கமான பிரார்த்தனை

November 25, 2023 தண்டோரா குழு

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.கடந்த 12 ஆம் தேதி வழக்கம்போல் சுரங்கப்பாதை பணிகள் நடந்து கொண்டிருந்த போது, திடீரென சுரங்கப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்களும் வெளியில் வர முடியாதப்படி சுரங்கத்திற்குள் சிக்கினர்.

அவர்களை மீட்கும் பணி 12வது நாளாக நீடித்து வருகிறது. தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்பது மீட்பு குழுவினர் சுரங்கப்பாதைக்குள் செலுத்திய கேமராவின் மூலம் தெரியவந்துள்ளது.இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியி்ல் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் மாணவ, மாணவிகள் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பத்திரமாக திரும்ப வேண்டி அனுமன் சாலிசா திருமந்திர பாராயணத்தை பாடி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

பள்ளியின் தலைவர் சுவாமினி சம்பிராதிஷ்டானந்தா தலைமையில் நடைபெற்ற இதில்,தாளாளார் வேணுகோபால்,பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில்,சிறிய பள்ளி குழந்தைகள் முதல் மேல் நிலை பள்ளி மாணவ, மாணவிகள் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆசிரியைகள் இணைந்து அனுமன் சாலிசாவை ஏழு முறை இணைந்து பாடினர்.

திருமந்திரத்தை மாணவ,மாணவிகள் பாடுகையில் பின்னனியில் உத்த்காண்ட் நிலச்சரிவு புகைப்படங்களை கண்டவாறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் படிக்க