June 5, 2018 தண்டோரா குழு
உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மலை மாவட்டமான நீலகிரியில் பல்வேறு அமைப்பினர் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் சுற்று சூழல் குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உதகையில் உள்ள ஜெம்பார்க் ஹோட்டலின் சார்பாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.ஹோட்டல் இயக்குனர் இஸ்மாயில்கான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி உதகையில் பல்வேறு சாலைகளில் உள்ள குப்பை கூளங்களை சுத்தம் செய்தனர்.
மேலும்,இவர்கள் சேகரித்த பிளாஸ்டிக் குப்பைகளை தனியாக பிரித்து மறுசுழட்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் ஹோட்டல் நிர்வாகத்தை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.