• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உதகை:சாலைகளை சுத்தம் செய்த தனியார் நட்சத்திர விடுதி ஊழியர்கள்

June 5, 2018 தண்டோரா குழு

உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மலை மாவட்டமான நீலகிரியில் பல்வேறு அமைப்பினர் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் சுற்று சூழல் குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உதகையில் உள்ள ஜெம்பார்க் ஹோட்டலின் சார்பாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.ஹோட்டல் இயக்குனர் இஸ்மாயில்கான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி உதகையில் பல்வேறு சாலைகளில் உள்ள குப்பை கூளங்களை சுத்தம் செய்தனர்.

மேலும்,இவர்கள் சேகரித்த பிளாஸ்டிக் குப்பைகளை தனியாக பிரித்து மறுசுழட்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் ஹோட்டல் நிர்வாகத்தை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.

மேலும் படிக்க