• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உணவு பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் விதிகள், தமிழகத்திற்கு பொருந்தாது – அமைச்சர் காமராஜ்

July 31, 2017 தண்டோரா குழு

உணவு பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் விதிகள், தமிழகத்திற்கு பொருந்தாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

பொது விநியோகத்திட்ட பயனாளிகளை அடையாளம் காண உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில், 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விசாயிகளுக்கு, 4 சக்கரவாகனம், குளிர்சாதனப்பெட்டி, வீடுகளில் 3 அறைக்கு மேல் இருந்தால், ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மேல் இருந்தால், தொழில் வரி, வருமானவரி செலுத்துபோரை உறுப்பினராக கொண்ட குடும்பத்திற்கு, மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு, வணிக நிறுவனங்களில் பதிவு செய்து செயல்படும் குடும்பம் உள்ளிட்டோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என அறிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் காமராஜ்,

மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் சேர முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிபந்தனை விதித்தார். அவரின் நிபந்தனை ஏற்றக் கொள்ளப்பட்டதால் தான் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் தமிழகம் இணைந்ததாகவும் மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவிதிவிலக்கு பெற்று தான் உணவு பாதுகாப்பு சட்டத்தில் தமிழகம் இணைந்துள்ளதாக கூறினார்.

மேலும்,மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் விதிகள் தமிழகத்திற்கு பொருந்தாது. அனைத்து தரப்பினருக்கும் வழக்கம்போல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். தற்போது உள்ள பொது விநியோகத்திட்டத்தில் எள்ளளவும் மாற்றமில்லை.ரேஷன் பொருட்கள் இல்லை என்பது வதந்தி எனவும் உணவு பாதுகாப்பு சட்டத்தில் சேர்ந்ததற்கு அடையாளமாக தான் அரசாணை வெளியிடப்பட்டது எனவும் கூறினார்.

மேலும் படிக்க