• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உணவுப் பொருட்களை செய்தி தாள்களில் பரிமாரக்கூடாது

December 29, 2016 தண்டோரா குழு

வியாபாரிகள் உணவுப் பொருட்களைச் செய்தித் தாள்களில் வைத்து பரிமாறக்கூடாது என கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பேக்கரிகள், சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் விற்கும் வடை, பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவு பொருட்களைச் செய்தித் தாள்களில் வைத்துப் பரிமாறுவதோ, பார்சல் செய்து கொடுப்பதோ உடல் நலத்திற்குத் தீங்கானது, அவ்வாறு தரப்படும் உணவுகளைப் பொதுமக்கள் உண்ணாமல் தவிர்க்க வேண்டும்.

செய்தித் தாள்களில் உள்ள மை பல்வேறு தீங்கு தரும் வேதிப் பொருட்களால் ஆனது, மேலும், பழைய செய்தித்தாள்களில் உள்ள பாக்டீரியா கிருமிகள் உடல் நலத்திற்கு வெகுவாக தீங்கு விளைவிக்க கூடியவை. இதனால் அஜீரணம், குடல் சம்பந்தமான நோய்கள் மற்றும் புற்றுநோய் சம்பந்தமான பாதிப்புகள் வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் அபாயம் உண்டு.

எனவே, உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் செய்தித் தாள்களைப் பயன்படுத்தவேண்டாம். அதைப் போல், பாலிதீன் பைகளில் சாம்பார், தேநீர் போன்ற சூடான பொருட்களை பார்சல் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வியாபாரிகள், சிறு வியாபாரிகள் “உணவு பாதுகாப்பு சட்டத்தின் (2006) படி உரிமம் மற்றும் பதிவு செய்வதற்கான கால அவகாசாம் 2016ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதத்துடன் முடிந்து விட்டது. அதன் பின் நீட்டிக்கபடவில்லை. போதிய கால அவகாசம் முடிந்தும் இன்னும் பதிவு செய்யாமால் உள்ளவர்கள் உடனடியாகப் பதிவு செய்து வியாபாரத்திற்கான உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கூறினார்.

மேலும் படிக்க