கோவை உக்கடம் குளத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் பாதிக்கப்படும் என தண்ணீரை ஆற்றில் திறந்துவிட முயற்சி – பொதிமக்களின் முற்றுகையால் கைவிடப்பட்டது.
கோவையில் கடந்த 5 நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், நொய்யல் ஆற்றில் அதிகளவில் வெள்ளம் வந்துகொண்டுள்ளது. இந்த வெள்ளத்தை கொண்டு குளங்களை நிரப்பும் பணியை விட்டு விட்டு, தண்ணீரை சேமிக்காமல், அதிமுக அரசு ஆற்றில் விட்டு வருகின்றது. இதற்கு உதாரணமாக, கோவை உக்கடம் பெரிய குளத்தில், தற்போது ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தண்ணீர் இருந்தால் பணிகள் பாதிக்கும் என, தண்ணீரை நொய்யல் ஆற்றில் வெளியேற்றும் நடவடிக்கையில் குளக்கரையை பின்புறம் வெட்டி வெள்ளத்தை நொய்யல் ஆற்றில் வெள்ளியேற்ற அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதையறிந்த பொதுமக்கள் தடுத்ததால், தண்ணீரை வெளியேற்றும் பணியை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். குளக்கரைகளை மேம்படுத்தும்போது, குளங்களின் அளவை குறைக்க கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், நீதிமன்றத்தையும் மீறி குளக்கரையை ஸ்மாட் சிட்டி திட்டம் மூலம் கரையோர பகுதிகளை மூடி வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச யோகா தினம்; ஆதியோகியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா நிகழ்ச்சி -நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி
பேரூர் ஆதீனம்,ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி “பாரம்பரிய சிவவேள்வி பூஜை”!-ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார்
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு