• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

”ஈஷா மஹாசிவராத்திரி விழாவை தடை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கை நிராகரிப்பு

November 10, 2020 தண்டோரா குழு

பாரத கலாச்சாரத்தின் மிக முக்கிய திருவிழாவாகவும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் விளங்கும் மஹாசிவராத்திரி தினத்தை ஈஷா கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக கொண்டாடி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அரசின் சட்டதிட்ட விதிகளை பின்பற்றி, எவ்வித அசம்பாவிதமும் இன்றி இவ்விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்விழாவில் ஜாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், ”ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு தடை விதிக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் நேற்று (நவம்பர் 9) தீர்ப்பளித்துள்ளது. அதில் விழாவுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த பசுமை தீர்ப்பாயம், ”வழக்கம்போல் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அனுமதிகள் பெற்று கொண்டு மஹாசிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம்” என உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை ஈஷா வரவேற்கிறது.

தமிழகத்தின் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக ஈஷா பல ஆண்டுகளாக களத்தில் செயல் செய்து வருகிறது. பசுமை கரங்கள் திட்டம், நதிகளை மீட்போம் இயக்கம், காவேரி கூக்குரல் இயக்கம் போன்றவை இதில் முக்கியமானவை. நாட்டின் உயரிய சுற்றுச்சூழல் விருதுகளில் ஒன்றான இந்திரா காந்தி பரியவரன் புரஸ்கார் விருது, இந்தியா டுடே நாளிதழின் ‘ஷஃபைகிரி’ விருது, தேசிய தண்ணீர் விருது போன்ற விருதுகள் கிடைத்துள்ளன. மேலும் ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பின் சர்வதேச அங்கீகாரமும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க