• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈரோடு நகர டி.எஸ்.பி. சுரேஷ்குமார் பணியிடை நீக்கம்- டி.ஜி.பி.ராஜேந்திரன் அதிரடி

July 29, 2017 தண்டோரா குழு

ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுரேஷ்குமாரை தற்காலிக பணி நீக்கம் செய்து தமிழக டி.ஜி.பி.ராஜேந்திரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2013ம் ஆண்டு தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அப்போது கைதி ஒருவர் காவல் நிலையத்தில் மரணமடைந்தார்.

இது தொடர்பான வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தற்போது ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பணியில் இருந்து அவர் ஓய்வு பெற 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த நடவடிக்கை அதிரடி எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க