• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இ.பாஸ் நடைமுறையில் தளர்வு – தமிழக அரசு அறிவிப்பு !

August 14, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இ.பாஸ் நடைமுறையில்
தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு அல்லது பிற மாநிலங்களுக்கும் செல்வதற்கு இ-பாஸ் பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதற்கிடையில்,பொதுமக்கள் சிரமப் படுவதால் இ.பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக தமிழக தலைவர் முருகன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
இந்நிலையில்,தற்போது விண்ணப்பித்த அனைவருக்குமே இ-பாஸ் கிடைக்கும். ஆதார் அல்லது ரேஷன்,அட்டை நகல்,தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் வழங்கப்படும் என இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டுமே இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சைகளுக்கு மட்டுமே இ-பாஸ் என்ற கட்டுப்பாடு தற்பொழுது தளர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையில் கொண்டு வரப்பட்ட தளர்வுகள் ஆக.17 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க