• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இஸ்ரேலில் கால் மொபைல் வாகனத்தை பார்வையிட்ட மோடி

July 7, 2017 தண்டோரா குழு

இஸ்ரேல் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, கடல்நீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்திய பிரமதர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் நாட்டிற்கு சென்றுள்ளார். இஸ்ரேல் நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையும் பெற்றார்.

இதையடுத்து, கடல்நீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பம் குறித்து பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமரிடம் கேட்டுள்ளார். அந்த தொழில்நுட்பத்தின் செயல்திறனை பிரதமர் மோடிக்கு காட்ட, இஸ்ரேல் நாட்டின் ஒல்கா கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் “கால் மொபைல்” எனப்படும் நடமாடும் நீர்சுத்திகரிப்பு வாகனத்தையும் பார்வையிட்டார்

இந்த வாகனத்திலிருந்து நாளொன்றுக்கு 2௦,௦௦௦ லிட்டர் வரை கடல் நீரை சுத்திகரிக்க முடியும்.
அதேபோல், அதிக மண்ணுடனும் மாசுடனும் இருக்கும் 80,000 லிட்டர் வரை நதி நீரையும் சுத்தப்படுத்த முடியும்.

மேலும் வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலத்தின்போது, பாதுகாப்பான குடிநீர் தேவைப்படும்போது, இந்த சிறப்பு வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க