• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இளநீர் வியாபாரம் செய்யும் பெண்ணின் மருத்துவ செலவிற்கு 25,000 வழங்கிய மாவட்ட ஆட்சியர்

July 6, 2020 தண்டோரா குழு

கோவையில் இளநீர் வியாபாரம் செய்யும் பெண்ணின் மருத்துவ செலவிற்கு தனது சொந்த பணத்தில் இருந்து 25,000 மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கோவை அடுத்த சிறுவாணி பகுதியை சேர்ந்தவர் ஜோதி.இவர் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தந்தை இறந்து 30 ஆண்டுகள் ஆன நிலையில் இவரும் இவர் தாயாரும் கிடைத்த வேலைகளை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால் அதற்கு போதிய பணம் இல்லாததால் மிகவும் சிரமத்தில் உள்ளதாகவும், தங்களால் முடிந்தவரை பணம் அளித்து உதவுமாறும் ஜோதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார்.

அந்த கோரிக்கை கடித்தத்தை மாவட்ட ஆட்சியர் பார்த்து அவரது சொந்த வங்கி கணக்கில் இருந்து 25,000 ரூபாய் காசோலையை அந்த பெண்ணிற்கு அளித்து உதவியுள்ளார்.

மேலும் படிக்க