• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறந்தவரின் ரேஷன்கார்டுக்கு பொங்கல் பரிசு – ரேஷன் கடை விற்பனையாளர் சஸ்பெண்ட்

January 19, 2021 தண்டோரா குழு

கோவை ராமநாதபுரம் பி.ஆர்.நகரில் வசித்து வந்தவர் நாராயணசாமி (80). இவர் உடல் நிலை பாதிப்பு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் இறந்து விட்டார். இதையடுத்து இவரது மகன் ராஜசேகரன், தனது தந்தை பொருட்கள் வாங்கி வந்த தனலட்சுமிபுரம் ரேஷன் கடைக்கு சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் தனது தந்தை இறந்து விட்டார். எனவே தனது தந்தையின் பெயரில் உள்ள ரேஷன் கார்டிற்கு பொருட்கள், பொங்கல் பரிசு வழங்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசான ரூ.2,500 பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு நாராயணசாமி பயன்படுத்தி வந்த ஸ்மார்ட் கார்டுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளதாக செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்து உள்ளது.

இதுகுறித்து ராஜசேகர் தமிழக வழங்கல் துறைக்கு புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேஷன் உத்தரவின் பேரில் வழங்கல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவரின் பெயரில் உள்ள ரேஷன்கார்டுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வழங்கல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கூட்டுறவு இணைப்பதிவாளர் பழனிசாமி, சம்பந்தப்பட்ட ரேஷன்கடை விற்பனையாளர் புஷ்பலதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்க