February 27, 2019
தண்டோரா குழு
இரு நாடுகளுக்கிடையே போராக மாறக்கூடாது மத்திய அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
கோவை விமானநிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது புல்வமா தாக்குதலை அடுத்து இந்திய விமான படையினர் பதிலடித்த தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதல் ஆறுதல் அளிக்கிறது என்றாலும் இருநாடுகளுக்கிடையே போர் மூளூம் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் உள்ள சூழலையை இந்தியா தவிர்த்து நல்ல முடிவு எடுக்க வேண்டும், இது நாடுகளுக்கிடையேயான போராக மாற கூடாது. அதை தடுப்பதற்கு தவிர்ப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், திமுக கூட்டணியில் முதல்கட்டமாக போட்டியிட விரும்பும் இடங்களின் பட்டியலை வழங்கி இருப்பதாகவும், உரிய நேரத்தில் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை எட்டும் எனவும் தெரிவித்தார் .திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக,இணக்கமாக வெற்றிகரமாக நிறைவேறும் என தெரிவித்த அவர்,காங்கிரஸ் மற்றும் இருங்கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு நடந்துள்ளது எனவும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எந்த தொய்வும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.