• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரவு நேரங்களில் ஏற்படும் வாகன விபத்துகளை தடுக்க கனரக வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர்

June 11, 2019 தண்டோரா குழு

இரவு நேரங்களில் ஏற்படும் வாகன விபத்துகளை தடுக்க கனரக வாகன ஓட்டுநர்களுக்கு போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தேநீர் அளித்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட ஊர்க்காவல் படை மற்றும் பொள்ளாச்சி உட்கோட்ட காவல்துறையினர் இணைந்து இரவு நேரங்களில் ஏற்படும் வாகன விபத்துகளை தடுக்கும் வண்ணம் பொள்ளாச்சியை கடக்கும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு அதிகாலை 2 மணி முதல் 4 மணிவரை தேனீர் அளித்தும் விபத்தில்லா சாலைகளை உருவாக்க தகுந்த அறிவுரைகளும் வழங்கப்பட்டது.

இதற்காக நேற்று ஊர்க்காவல் படை பிரதேச தளபதி பாலாஜி ராஜு, துணை பிரதேச தளபதி வித்யா ஸ்ரீ தர்மராஜ் மற்றும் பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சிவகுமார், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கட்ராமன் மற்றும்உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் தலைமையில் நேற்று இரவு உஞ்சவேலாம்பட்டி பகுதியில் வாகன ஓட்டுனர்களுக்கு தேனீர் அளித்தும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது.

மேலும் காவல் ஆய்வாளர் கூறுகையில்,

வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். எந்த ஒரு தொழிலாளர் தவறு செய்தாலும் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் ஓட்டுநர்கள் தவறு செய்தால் திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைப்பது இல்லை அதற்குள் விபத்துகள் ஏற்பட்டு விடுகின்றன. எனவே வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். மேலும் விபத்தில்லா சாலைகளை உருவாக்கவேண்டும் என்ற சீரிய எண்ணத்துடன் கோவை மாவட்ட ஊர்க்காவல் படையினர் செய்யும் இந்த பணியானது மிகவும் உன்னதமானது என்றார்.

கோவை மாவட்ட பிரதேச தளபதி பாலாஜி ராஜு கூறுகையில்,

வாகன ஓட்டிகள் இடைவேளை இல்லாமல் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் விபத்துகள் குறைய இது போன்ற முயற்சி மிகவும் அவசியமானது. வாகன விபத்து இல்லாத மாவட்டமாக கோவை மாவட்டம் திகழ வேண்டும்.

பொள்ளாச்சி மட்டும் இல்லாமல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து புறவழிச் சாலைகளிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்தில்லாத சாலையை உருவாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 30 ஊர்க்காவல் படை வீரர்கள், ஊர்க்காவல் படை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி ஊர்க்காவல் படை படைப்பிரிவு தளபதி பழனிச்சாமி மற்றும் உதவி படைப்பிரிவு தளபதி சித்தார்த்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் படிக்க