• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரயில் பயணிகள் பாதுகாப்பிற்காக புதியசெயலி அறிமுகம் !

November 24, 2018 தண்டோரா குழு

இரயில் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்த GRP help app எனப்படும் புதிய செயலியை ஏ.டி.ஜி.பி. சைலேந்தர் பாபு கோவை இரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ரயில் பயணிகள் அனைவரும் இந்த செயலியை ரயிலில் பயணிக்கும் போது தரவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும். திருட்டு, பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை, சந்தேகத்திற்கிடமான பொருட்கள், நபர், கைவிடப்பட்ட சிறார்கள், குழந்தைகள் என ரயிலிலோ, ரயில் நிலையத்திலோ பார்க்க நேர்ந்தால் உடனே இந்த செயலி மூலம் தகவல் தெரிவித்தால், 2 நிமிடங்களில் ரயில்வே காவல்துறையினர் அங்கு வந்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் இந்த செயலி உதவும்.

போபாலில் இதனுடைய தலைமை அலுவலகம் உள்ளதால், வட மாநிலத்திற்கு சென்றால் கூட இந்த செயலியை பயன்படுத்தலாம். சென்றாண்டு மட்டும் பெண்களிடம் தவறாக நடந்துக்கொண்ட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதுபோன்ற நேரத்தில் காவல் நிலையம் சென்று தான் புகார் அளிக்க வேண்டும் என்பதில்லை, இந்த செயலி மூலம் என்ன நடந்தது என்று புகார் தெரிவித்தால், வீட்டிற்கு பெண் ரயில்வே காவல் அதிகாரி வந்து விசாரித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

மேலும் படிக்க